ஸ்தோத்திரம் தேவா | Sthothiram Deva kaathidum

ஸ்தோத்திரம் தேவா காத்திடும் மூவா
நேத்திரம் போல் நேசித்துப் புதுநாளில்
தீக்கொன்றும் அணுகாமல் எமைத்
தாங்கி நடத்தும் தேவா - எமக்
கீந்த இப் புது நாளில்

1. மானில மீதிலே கானக வழியில்
   மானிடரும்மை விரும்பியே
   பணிந்து வந்தோம்
   முந்தின காலங்களில் எம்
   அன்னைப்போல் அன்புடனே நின்று
   தந்தை போல் தாங்கினீரே

2. ஜெபமதை கேட்கும் ஜீவனின் தேவா
   ஏழைகளெம் ஜீவனைக் காத்தணைத்தீர்
   ஜீவிக்க செய்தீர் எம்மை - எத்
   தீமையும் தீண்டிடாமல் - இங்கு
   தீயோன்மேல் ஜெய மளித்தே

3. தினமும் நீர் நடத்தும் திரு வழிதனிலே
   தேவனும்மையே நம்பி பின்பற்றுவனே
   வேதனை அணுகிடாமல் - இந்
   நாளிலும் நடத்துவீரே - இங்கு
   வேறொரு துணையில்லையே

4. பார்தல மீதிலே பரிசுத்தமாக
   சீருடனே சீயோன் பார்த்தேகிடவே
   என்றும் கிருபை அருள்வாய்  - மா
   தூய்மையின் சாயலுடன் - உம்மை
   மகிமையில் தரிசிக்கவே

5. கர்த்தனும் வருகை களிப்புடன் காண
   காத்துக் காத்தெம் கண்களும் களைத்திடுதே
   இன்றையத்தின மதிலே - நீர்
   வந்தாலோ எம் துரையே - உம்
   மந்தையும் மகிழ்ந்திடுமே

                                           HOME